தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசு பணியாளர்கள் திருத்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. அதன்படி அரசு பணிக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தாளில் 40% மார்க்பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் தேர்ச்சி பெறாதவர்கள் இனி அரசு பணிகளில் சேர முடியாது. 2021 டிசம்பர் 1முதல் அரசு பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் இது பொருந்தும்.
