Skip to content
Home » தாயார் உடல் தகனம் முடிந்ததும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மோடி

தாயார் உடல் தகனம் முடிந்ததும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மோடி

  • by Senthil

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்(100). இவர் குஜராத் மாநிலம்  அகமதாபாத்தில் உள்ள மோடியின் சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள யு.என். மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில்  நேற்று முன்தினம்  ஹீராபென்  அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவர் காலமானார். அதைத்தொடா்ந்து பிரதமர் மோடி குஜராத் வந்தார். தாயாருக்கு இறுதிச்சடங்குகளை நடத்தினார். அதைத்தொடர்ந்து ஹீராபென் உடல் காலை 9.30 மணிக்கு தகனம் செய்யப்பட்டது.

அதைத்தெடர்ந்து 11.30 மணிக்கு அகமதாபாத்தில் இருந்தபடியே அரசு நிகழ்ச்சிகளில் காணொலி வாயிலாக பங்கேற்றார். மேற்கு வங்க மாநிலத்தில் வந்தே பாரத் ரயில்சேவையை தொடங்கி வைத்தார். மறுமுனையில் காணொலியில் பங்கேற்ற முதல்வர் மம்தா பிரதமருக்கு  ஆறுதல் கூறி இரங்கல் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!