Skip to content
Home » தொப்புள் கொடி வெட்டிய இர்பானுக்கு மன்னிப்பு இல்லை….. அமைச்சர் மா.சு.

தொப்புள் கொடி வெட்டிய இர்பானுக்கு மன்னிப்பு இல்லை….. அமைச்சர் மா.சு.

  • by Senthil

 யூடியூபர் இர்பானின் மனைவிக்கு கடந்த ஜூலை மாதம்  24ம் தேதி   பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது, ஆபரேசன் தியேட்டரின் உள்ளே   மருத்துவா்கள் போல கவச உடை அணிந்திருந்த  இர்பான், குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால்  அவரே துண்டித்தார். இதனை வீடியோவாக எடுத்த அவர், தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டார்..இந்த வீடியோ வைரலான நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி தெரிவித்தார்.

 இது குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:  குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட, இர்பானை மன்னிக்க முடியாது. தற்போது இர்பான் செய்தது மன்னிக்கக் கூடியது அல்ல; கண்டிக்கக் கூடியது. இந்த விவகாரத்தில் மருத்துவர் நிவேதிதா மீதும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்களை காப்பாற்ற தி.மு.க., அரசு எப்போதும் நினைக்காது. இர்பான் சர்ச்சை வீடியோ விவகாரத்தில் மன்னிப்பு கேட்டாலும், விட மாட்டோம். சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை தொடரும். இவ்வாறு  அமைச்சர்  கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!