Skip to content
Home » திருச்சியில் அரசு பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி.. 21 பேர் காயம்….

திருச்சியில் அரசு பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி.. 21 பேர் காயம்….

பெங்களூருவில் இருந்து அரசு சொகுசு பஸ் ஒன்று 49 பயணிகளுடன் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. திருச்சி மண்ணச்சநல்லூர் வாத்தலையில் வரும்போது அரசுசொகுசு பஸ் கவிழ்ந்து விபத்தானது. தேசிய நெடுஞ்சாலையில் வளைவில் திரும்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் கவிழ்ந்து விபத்தானது. இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.  இதில் அவர்களை உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் ஓசூர் அவளப்பள்ளியை சேர்ந்த ஸ்டீபன் அய்யாதுரை பாண்டியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இந்த விபத்து தொடர்பாக வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!