Skip to content

கவர்னர் உரை புறக்கணிப்பு….. எடப்பாடி பழனிசாமி கருத்து

  • by Authour

கவர்னர் உரை குறித்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

தமிழக அரசு தயாரித்த கவர்னர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எதையும் அரசு அறிவிக்கவில்லை. தமிழக அரசு தயாரித்த கவர்னர் உரை, உப்பு சப்பு இல்லாத ஊசிப்போன உணவு பண்டம். தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக கவர்னர் ஏற்கனவே சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கவர்னர் தனது உரையை புறக்கணித்தது தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவியிடம்தான் கேட்க வேண்டும். கவர்னருக்கு என்ன பிரச்சனை என்பதை அரசு, கவர்னர், சபாநாயகரிடம்தான் கேட்க வேண்டும். எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் மரபை கடைபிடிக்கவில்லை.

 

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!