Skip to content

ஆணவம் பிடித்தவர் ஸ்டாலின்- கவர்னர் ரவி நேரடிபாய்ச்சல்

  • by Authour

பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத, மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆணவம் நல்லதல்ல என்று என்று ஆளுநர் மாளிகை விமர்சித்துள்ளது.

2025-ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த 6-ம் தேதி தொடங்கியது.  முதலில் தேசிய கீதம்   பாட வேண்டும் என  கவர்னர்  கோரிக்கை வைத்தார். தமிழ் த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்படும்.  தேசிய கீதம் நிறைவாக பாடப்படும்.  இது தான் தமிழகத்தின் மரபு என  தமிழக அரசு விளக்கம் அளித்தது.

ஆனால்  கவர்னர் அந்த மரபை மாற்றும்படி வற்புறுத்தினார். இது ஏற்கப்படாததா கவர்னர் ரவி  சட்டமன்றத்தில்  உரையை படிக்காமல்  வெளியேறிறனார்.   இது குறித்து கவர்னரும், முதல்வரும் தங்கள் தரப்பு  விளக்கத்தை அளித்தனர்.

இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

error: Content is protected !!