Skip to content

கவர்னர் ஆர்.என்.ரவி திருச்சி வந்தார்…

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரத்தின கீர்த்தனை நாளை காலை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 5.45 மணியளவில் திருச்சி வந்தார். அவரை கலெக்டர் பிரதீப் குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பின்னர் கவர்னர் காரில், தஞ்சை புறப்பட்டு சென்றார். விழா முடிந்ததும் கவர்னர் நாளை மதியம் காரில் திருச்சி வந்து, விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார். கவர்னர் வருகையை முன்னிட்டு திருச்சியில் இருந்து தஞ்சை வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!