மத்திய பிரதேசத்தின் ஷாதூல் நகரில் சிங்பூர் ரெயில் நிலையம் அருகே 2 சரக்கு ரெயில்கள் இன்று நேருக்கு நேர் மோதி கொண்டன. மோதிய வேகத்தில் ஒரு ரெயிலின் என்ஜின் மற்றொரு ரெயிலின் மீது ஏறியது. இந்த சம்பவத்தில் இரு ரெயில் எஞ்சின்களும் தீப்பிடித்து எரிய தொடங்கின. ரெயில் விபத்தில் இரு ரெயில்களின் ஓட்டுநர்களும் காயமடைந்து உள்ளனர். 2 ரயில்வே பணியாளர்கள் விபத்தில் சிக்கி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் மீட்பு பணிக்காக விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று உள்ளனர். இதனால், பிலாஸ்பூர் மற்றும் கத்னி வழியே செல்லும் ரயில் போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.
