Skip to content
Home » திருச்சி விமானத்தில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமானத்தில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து நேற்று இண்டிகோ விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை சோதனை  செய்தனர். அப்போது ஒரு பயணி கொண்டு வந்த எலக்ட்ரானிக் சாதனத்தின் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எனவே அந்த சாதனத்தை பிரித்து சோதனையிட்டபோது அதில்  தங்க சங்கிலி மற்றும்  வில்லைகள் வடிவிலும் தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் எடை 338 கிராம்.  இவை24 காரட் தங்கம்.  இதன் மதிப்பு 20 லட்சத்து 37ஆயிரத்து 126 ரூபாய். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை கடத்தி வந்த நபரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!