Skip to content

தமிழர்களை இழிவுபடுத்திய மோடியை கண்டித்து சென்னையில் சுவரொட்டி

தமிழ்நாட்டிற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய உள்ளார். இந்நிலையில் மோடியின் தமிழக வருகையை கண்டித்து திமுக வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை என்பவர் Go Back Modi’என போஸ்டர் அடித்து திருவல்லிக்கேணி, பூக்கடை மற்றும் பாரிஸ் கார்னர் பகுதிகள் முழுவதும் ஒட்டியுள்ளார்.

அதில், தமிழ் மக்களை இழிவுபடுத்திவிட்டு தமிழ்நாட்டிற்கே வருவதா என்ற வாசகத்துடன் வழக்கறிஞர் தனது புகைப்படத்துடன் ஒட்டியுள்ள போஸ்டர்களை மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கிழித்து அப்புறப்படுத்திய நிலையில், வழக்கறிஞர் அண்ணாதுரையிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!