Skip to content
Home » மூதாட்டியை ஏமாற்றி நகையுடன் சென்ற மர்ம நபர்கள்…. தஞ்சையில் சம்பவம்…

மூதாட்டியை ஏமாற்றி நகையுடன் சென்ற மர்ம நபர்கள்…. தஞ்சையில் சம்பவம்…

தஞ்சை மாதாக்கோட்டை சாலை வெற்றி நகரை சேர்ந்தவர் மோகன்.‌ இவரது மனைவி அமுதா (65). இவர் கடந்த 17ம் தேதி பால் வாங்குவதற்காக வீட்டில் இருந்து கடைக்கு செல்ல சாலையில் நடந்து சென்றார். அப்போது வைரம் நகரில் அமுதா சென்று கொண்டிருந்தபோது சென்றபோது அங்கு நின்றிருந்த இருந்த 2 மர்ம நபர்கள் அமுதாவை வழிமறித்து நகைகளை கழுத்தில் அணிந்து செல்லாதீர்கள். திருட்டு பயம் அதிகம் உள்ளது. யாராவது உங்கள் நகைகளை திருடி கொண்டு போய் விடுவார்கள். எங்களிடம் கழற்றி கொடுங்கள். நாங்கள் பாதுகாப்பாக பையில் வைத்து தருகிறோம் என்று கூறியுள்ளனர்.

இதை நம்பிய அமுதா தான் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை கழட்டி அந்த மர்மநபர்களிடம் கொடுத்துள்ளார். பின்னர் அந்த மர்ம நபர்கள் ஒரு பையில் நகையை வைத்து கொடுத்துள்ளனர். இதையடுத்து வீட்டிற்கு வந்து அமுதா அந்த பையை பிரித்து பார்த்துள்ளார். அதில் நகைக்கு பதில் கூழாங்கற்கள் இருந்துள்ளது. இதனால் அந்த நபர்கள் தன்னை ஏமாற்றியதை உணர்ந்த அமுதா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அமுதா தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!