Skip to content

பெண்ணிடம் 5 பவுன் தாலிசெயின் பறிப்பு… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம்,வேப்பந்தட்டை தாலுகா அ.பூம்புகாரை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி அருணா(27). இவர் நவம்பர் 19 ம் தேதி மாலை அ.பூம்புகாரில் இருந்து அன்னமங்கலத்தில் வார சந்தைக்கு காய்கறி வாங்கிக் கொண்டு மீண்டும் வீடு அ.பூம்புகாருக்கு மொபட்டில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அ.பூம்புகார் பால் பண்ணை அருகே வந்த போது மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்து அருணாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.இது குறித்து அருணா அரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தாலி செயினை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!