Skip to content

பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டல்….கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்….

காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோயில்  செயல் அலுவலர்  வேதமூர்த்தி. இவர் அந்த கோயில் பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான  கண்காணிப்பு காமிரா பதிவுகள்  சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த அறநிலையத்துறை  உயர் அதிகாரிகள் கோயிலுக்கு வந்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தினர்.  சம்பவம் உண்மை என்பது உறுதி செய்யப்பட்டதால்,  வேதமூர்த்தி,  திருச்செந்தூர் கோயில்  செயல் அலுவலராக மாற்றப்பட்டார். அத்துடன் இவர் மீது துறைரீதியான விசாரணை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!