Skip to content

கணவன் கள்ளத்தொடர்பு…. திருமணமான 2 வாரத்தில் இளம்பெண் தற்கொலை…

  • by Authour

கரூர், தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ராகபிரியா (27) இவர் பொரணியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ராகப்பிரியாவிற்கும், சுதர்சன் என்பவருக்கும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் சுதர்சனுக்கும் மற்றொரு பெண்ணிற்கும் இடையே தகாத உறவு இருந்ததாக ராகபிரியாவிற்கு தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மணமுடைந்து காணப்பட்ட ராகப் பிரியா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி இறந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்தற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருமணம் ஆன இரண்டு வாரங்களில் புதுப்பெண் தூக்கு மாட்டி இறந்ததால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், தனது தற்கொலைக்கு கணவர்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, ராகபிரியா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. சம்பவம் குறித்து கரூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!