ஹைதராபாத் பேகம்பேட் ரயில் நிலையத்தில் RPF பெண் கான்ஸ்டபிள் ஒருவர் ஒரு இளம் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஓடும் ரயிலில் சரஸ்வதி என்ற இளம்பெண் ஏற முயற்சித்த போது ரயில் வேகமாக சென்றதால், பிளாட்பாரத்திற்கும் ரயிலுக்கும் இடையே
விழுந்தார். உடனடியாக அங்கிருந்த ஆர்பிஎப் பெண் காவலர் சரஸ்வதியை இழுத்து கண் இமைக்கும் நேரத்தில் அவர் உயிரை காப்பாற்றியுள்ளார். இச்செயலை கண்டு பெண் காவலரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.