Skip to content
Home » சிறுமியை கடத்தி பலாத்காரம்…. அரியலூரில் வாலிபர் போக்சோவில் கைது….

சிறுமியை கடத்தி பலாத்காரம்…. அரியலூரில் வாலிபர் போக்சோவில் கைது….

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தையடுத்த ஸ்ரீபுரந்தான் குமிளந்துறை பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளியான அஜித். இவர் அதே பகுதி பக்கத்து ஊரில் உள்ள பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அடிக்கடி அவரை சந்தித்து பேசி உள்ளார். தொடர்ந்து சிறுமி காதலை மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் அஜித் சிறுமியை கடத்தி சென்று, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நடந்ததை அந்தப் பெண் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தாயார், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அஜித்தை காவல் நிலையம் அழைத்து வந்து, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தினார். விசாரணையில் சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அஜித்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதி பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!