திருச்சி உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை எதிரில், கீழ புதுபாய்க்காரதெருவில் வசிப்பவர் சர்தார். நேற்று மாலை பள்ளிவாசல் சென்று தொழுகை நடத்திவிட்டு பின்னர் வீட்டுக்குவந்த சர்தார், வீட்டின் லைட்டை போட்டபோது திடீரென்று மின்வயரில் இருந்து பொறி கிளம்பியதுடன், அதன்பின்னர் சிலிண்டரில் தீப்பற்றி சிலிண்டர் டமார் என வெடித்து சிதறியது. சத்தம் கேட்டதும் சர்தார் வெளியே ஓடிவந்ததால் உயிர்தப்பினார்.சிலிண்டர் வெடித்த சத்தத்தால் அந்த பகுதியே அதிர்ந்தது.
தகவல் அறிந்ததும் கண்டோன்மென்ட் தீயணைப்புநிலைய, அலுவலர் பால்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து தீயை அணைத்தனர்.
இருப்பினும், வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்துசாம்பலானது, தீவிபத்துகுறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணைசெய்து வருகின்றனர்.
கேஸ் சிலிண்டரிலிருந்து கேஸ்கசிவு ஏற்பட்டதாலேயே இந்தவிபத்து நேரிட்டு இருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம் தீவிபத்து நடந்தபகுதியில் மற்றவீடுகளுக்கும் ஏதேனும் மின்சார வயர்கள் மூலமாக மின்விபத்து நடைபெறாமல் இருக்க மின்சார இணைப்பை துண்டிக்ககோரி மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்து, ஒருமணிநேரம் ஆகியும் மின்விநியோகத்தை நிறுத்த மின்சார வாரியத்தினர் முன்வராதது மின்சாரவாரியத்தின் மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.