உத்தமர் காந்தியடிகளின் நினைவு நாளான தியாகிகள் நாளையொட்டி, இன்று (30.01.2023) புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில், தமிழ்நாடு அரசின் முதன்மைச்செயலாளர் / உள்ளுறை ஆணையாளர் திரு.ஆஷிஷ் சாட்டர்ஜி, தலைமையில் கூடுதல் உள்ளுறை ஆணையாளர் திரு.சின்னதுரை, மற்றும் அலுவலர்கள் “தீண்டாமை ஒழிப்பு” உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு இன்று (30.1.2023) தலைமைச் செயலகத்தில், சிங்கப்பூர் குடியரசின்
சென்னை தலைமை துணை தூதர் எட்கர் பங் , மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். உடன் சட்டமன்றப் பேரவைச் செயலாளர் முனைவர் கி. சீனிவாசன் உள்ளார்.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் இன்று (30.1.2023) தலைமைச் செயலகத்தில், சிங்கப்பூர் குடியரசின் சென்னை தலைமை துணை தூதர் எட்கர் பங் , மரியாதை நிமித்தமாகச்
சந்தித்தார். உடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் முனைவர் எம்.ஜெயந்தி, உள்ளார்.