Skip to content
Home » சிறுவர்கள் உள்பட 9 பேர் கூட்டு பலாத்காரம்….. உடுமலை சிறுமி கர்ப்பம்

சிறுவர்கள் உள்பட 9 பேர் கூட்டு பலாத்காரம்….. உடுமலை சிறுமி கர்ப்பம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை  சேர்ந்த 17 வயது சிறுமி தாத்தா வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அவரை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.
அப்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து சிறுமியை உறவினர்கள் விசாரித்த போது 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். இதை அடுத்து உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் ஜெய காளீஸ்வரன்( 19), மதன்குமார்( 19), பரணி குமார்( 21), பிரகாஷ் (24), நந்தகோபால்( 19 ), பவா பாரதி (22) மற்றும், 14, 15. மற்றும் 16 வயது சிறுவர்கள் என மொத்தம் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் உடுமலை பகுதியைச் சேர்ந்தவர்கள்.
பின்னர் அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கு இடையில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் உரிய விசாரணை செய்யுமாறு உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தின் முன்பு திரண்டனர் . இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது உரிய விசாரணைக்கு பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே நடவடிக்கை ஒத்துழைப்பு அளிக்குமாறும் போல தெரிவித்தனர். இதை அடுத்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!