திருச்சி மாவட்டம், துறையூர் அருகே இறுதி ஊர்வலத்தின் போது வெடி வெடித்ததில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் ஸ்ரீதர் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். 16 பேர் காயமடைந்தனர் . இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்த அனைவரும் துறையூர் அரசு மருத்துவமனை மற்றும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேருடைய நிலைமை கவலைக்கிடம் என கூறப்படுகிறது..
இறுதி ஊர்வலம்..வெடி வெடித்ததில் ஒருவர் பலி… 4 பேர் சீரியஸ்….திருச்சியில் பரபரப்பு..
- by Authour
