Skip to content

102 வயது தியாகி சங்கரய்யா காலமானார்……

  • by Authour

சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில  முன்னாள் செயலாளருமான  என். சங்கரய்யா இன்று மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 102.  அவர்  சளி, இருமல், காய்ச்சல், உள்ளிட்ட  பாதிப்புகளால் நேற்று  சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  சிகிச்சை பலனின்றி காலமாகி விட்டார்.

சங்கரய்யா  தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் பிறந்தவர்.  இவர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால்  கல்லூரி படிப்பு தடை பட்டது.  சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு   சிறை சென்றார். அவருக்கு  மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்  முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என  பல்கலைக்கழகம்  தீர்மானம் நிறைவேற்றியது. அதை  ஏற்க தமிழக கவர்னர்  ரவி மறுத்து விட்டார்.   முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தும் கவர்னர் ரவி,  சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மாட்டேன் என பிடிவாதமாக இருந்து விட்டார். இன்று அந்த தியாகி  சங்கரய்யா   காலமாகி விட்டார்.  இதனால் தமிழ் மக்கள் மிகவும் வேதனையுடன் உள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!