Skip to content

அரியலூர்….விவசாய மோட்டார் வயர்களை திருடிய 2 பேர் கைது…

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பெரும்பாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். வயது 42. விவசாயி ஆன இவர் தனது வயலில் கடந்த சில நாட்களாக ஆழ்துளை கிணறு அமைத்து வருகிறார்.
அங்கு நீர்மூழ்கி மோட்டார் மற்றும் மின்சாரம் வயர்களையும் அவரது வயலில் வைத்துவிட்டு இரவில் வீட்டிற்கு வந்துவிட்டார். நேற்று காலையில் வயலுக்கு சென்றபோது, அங்கிருந்து 3 நபர்கள் வயர்களுடன் வந்துள்ளனர் .
அவர்களை பிடித்து விசாரித்த போது, 3 பேரும் வைத்திருந்த வயர்களை வீசி எறிந்து விட்டு தப்பி ஓடினர். உஷாரான குமார் மற்றும் உறவினர்கள், அவர்களை விரட்டி சென்று 2பேரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது 2 பேரும், குமார் வயலில் இருந்து வயர்களை
திருடி வந்ததை ஒப்புக்கொண்டனர். கிராம மக்கள் இரண்டு பேரையும் செந்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்கள்செந்துறை சமத்துபுரத்தில் வசிக்கும் கரிகாலன் மகன்
மணிகண்டன் (வயது 20) மற்றும் லட்சுமணன் மகன் மணிகண்டன் (வயது 33) என்பதும் வி.கைகாட்டி அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை மகன் மணிகண்டன் தப்பி ஓடியதும் தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு மணிகண்டன் களையும் கைது செய்து, செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய மற்றொரு மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இதேபோல் செந்துறை பகுதியில் பல்வேறு இடங்களில் மின் மோட்டார் வயர்கள் திருட்டு போய் உள்ளது. இந்த திருட்டில் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!