Skip to content
Home » கேரளாவில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 100பேர் பாதிப்பு

கேரளாவில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 100பேர் பாதிப்பு

  • by Senthil

கேரளாவில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கீழ்வாய்பூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த டிசம்பர் 29-ந்தேதி ஞானஸ்நான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்டவர்கள் பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக விழாவில் உணவு சப்ளை செய்த கேட்டரிங் சர்வீஸ் ஏஜென்சி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்து உணவு மாதிரிகளை சேகரித்து போலீசார் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கேட்டரிங் நிறுவனம் மீது இந்திய தண்டனைச் சட்டம் 268, 296 மற்றும் 272 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தி விரிவான அறிக்கை சமர்ப்பிக்க உணவு பாதுகாப்பு ஆணையருக்கு கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!