Skip to content
Home » கடல் சீற்றம்……. நாகை மீனவர்கள் முடங்கினர்

கடல் சீற்றம்……. நாகை மீனவர்கள் முடங்கினர்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்  இன்று இலங்கை திரிகோணமலை பகுதியில் கரை கடந்தது. இதன் காரணமாக தென் தமிழக மாவட்டங்களிலும், வட தமிழக மாவட்டங்கள்.புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மிதமான மற்றும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக  கடந்த மூன்று நாட்களாக நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் நாகை நாகூர் வேளாங்கண்ணி வேதாரண்யம் சிக்கல் கீழையூர் கீழ்வேளூர் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாக, நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள. இதனை அம்மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். கடல் சீற்றம் மற்றும் கனமழை காரணமாக, நாகை மாவட்டத்தில் 20 ஆயிரம்  மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. மீனவர்களின் படகுகள் அனைத்தும் பாதுகாப்பாக துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுபோல நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!