Skip to content

அரியலூர்… போலி மருத்துவர் கைது… திருமானூர் போலீசார் விசாரணை…

  • by Authour

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள விரகாலூர் மெயின் ரோட்டில், விக்னேஷ்வரன் என்ற பெயரில் மருந்து கடை செயல்பட்டு வருகிறது. இந்த மருந்து கடையில் ஆங்கில மருத்துவம் படிக்காமல், ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக, திருமானூர் வட்டார மருத்துவ அலுவலர் மணிவண்ணனுக்கு புகார் வந்துள்ளது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மருத்துவர் மணிவண்ணன், மருந்து கடையை ஆய்வு செய்தபோது, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் ஆங்கில மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளிப்பது தெரியவந்தது.  இதனையடுத்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்த பன்னீர்செல்வம் மீது வட்டார மருத்துவ அலுவலர் மணிவண்ணன் திருமானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பன்னீர் செல்வத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!