Skip to content

தொகுதி சீரமைப்பு: அடுத்த கட்டமாக பிரதமர் மோடியை சந்திக்க முடிவு, முதல்வர் தகவல்

  • by Authour

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சட்டமன்றத்தில் இன்று விளக்கம் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டு ஒத்திவைக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் தொடர்பாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கடந்த 5-ம் தேதி ஆலோசித்தோம். மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகத் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது இருக்கும் தொகுதி மறுவரையறை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும். வட மாநிலங்களில் எந்த விகிதத்தில் மறுசீரமைக்கப்படுகிறதோ அதே விகிதத்தில் தமிழ்நாட்டிலும் உயர்த்த வேண்டும்.

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு பாதிக்கப்படாது என்று பிரதமர் உறுதியளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது. தற்போதைய நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பிரதமரிடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளோம். அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முன்னெடுத்துள்ள தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது. நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் குழு பிரதமரை சந்திப்பர். மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஒன்றிய அரசுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே கூட்டுக் குழு கூட்டம்   நடத்தப்பட்டது.

இவ்வாறு முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

error: Content is protected !!