Skip to content
Home » எம்.ஜி.ஆர் நினைவுதினம்….காப்பக குழந்தைகளுக்கு ப. குமார் உதவி

எம்.ஜி.ஆர் நினைவுதினம்….காப்பக குழந்தைகளுக்கு ப. குமார் உதவி

  • by Senthil

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 35வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சி கோர்ட் அருகே உள்ள  எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்,அம்பிகாபுரம் செர்வைட் குழந்தைகள் காப்பகத்தில்
எம்.ஜி.ஆர்  நினைவுநாளினை முன்னிட்டு காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு.. காலை உணவு மற்றும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்.பி.  குமார் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழகச் செயலாளர்கள்  எஸ்.எஸ். ராவணன், நகர கழக செயலாளர் .பாண்டியன், பகுதி கழக செயலாளர்கள் ஏ.தண்டபாணி, .பாலசுப்பிரமணியன், அணி செயலாளர்கள் கே.எஸ். .பாஸ்கர், எஸ்.ராஜமணிகண்டன், எம்.சுரேஷ்குமார், மற்றும் வட்ட கழக செயலாளர்கள் நிர்வாகிகள் சார்பு அணியை சார்ந்த செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் என்.கார்த்திக் சிறப்பாக செய்திருந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!