Skip to content

முசிறி முன்னாள் எம்.எல்.ஏ. பிரின்ஸ் தங்கவேல் காலமானார்

  • by Authour

முசிறி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏவும்,  திருச்சி புறநகர் மாவட்டம் அதிமுக அவைத்தலைவருமான  பிரின்ஸ்  எம். தங்கவேல்  நேற்று இரவு மாரடைப்பால் காலமானார்.  இவர் 1989 ல்  ஜெயலலிதா அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டபோது இவரும்  சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1991ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 முறை எம்.எல்.ஏவாக இருந்தார்.   பிாின்ஸ்  மறைந்த தகவல் அறிந்ததும் அதிமுக , திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை  இறுதிச்சடங்கு நடக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!