Skip to content
Home » ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர் தென்னரசு….. எடப்பாடி அறிவிப்பு

ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர் தென்னரசு….. எடப்பாடி அறிவிப்பு

  • by Senthil

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்வரும்  27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்க நேற்று தொடங்கியது.  பிப்ரவரி 7-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள்.

நேற்று முதல் நாளில் 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே, இடைத்தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

இதேபோன்று தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

. இன்னிலையில் ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் போட்டியிட ஈபிஎஸ் தரப்பு அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ். தென்னரசு போட்டியிடுவார் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தென்னரசு 2016 ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வானார். இந்த தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கத்தை நிறுத்த எடப்பாடி திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவர் போட்டியிட மறுத்து விட்டதால், தற்போது தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!