Skip to content
Home » ஈரோடு இடைத்தேர்தல்… நியாயமாக நடத்தப்படும் .. ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி…

ஈரோடு இடைத்தேர்தல்… நியாயமாக நடத்தப்படும் .. ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி அதிமுக அமைப்புச்செயலாளர் சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி நேர்மையாக , நியாயமாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் பதில் தெரிவித்தது. மேலும் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் , தங்களால் செய்ய முடிந்ததை சிறப்பாக செய்வதாகவும் , இரட்டை பதிவு உள்ளவர்களின் பட்டியல் சம்பத்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன . தேர்தல் பணிக்கு 409 சி.ஆர்.பி.எப். வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .என தகவல் தேர்தல் ஆணையம் பதில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த எடுத்த நடவடிக்கையை எழுத்துபூரவமாக 20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!