Skip to content
Home » ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் எப்போது? சாகு பேட்டி

ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் எப்போது? சாகு பேட்டி

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று சென்னையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டார். அப்போது நிருபர்கள், ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா மரணம் அடைந்து விட்டதால் அங்கு எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என கேட்டனர்.

அதற்கு  பதிலளித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுகூறியதாவது:- “சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியான 6 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதிமுறை. ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் முறைபடி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!