Skip to content

ஈரோடு கிழக்கு: 2 மணி நேரத்தில் 10.85% வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.  தொடக்கத்தில் இருந்தே மக்கள்  ஆர்வமாக வந்து வாக்களிக்கத் தொடங்கினர்.   வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே  பல வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

முதல் இரண்டு மணி நேரத்தில், அதாவது காலை 9 மணிக்கு 10.85 சதவீத வாக்குகள் பதிவானது.  அதே நேரத்தில் டில்லி சட்டமன்ற தேர்தலில் காலை 9 மணிக்கு 8.10 சதவீத வாக்குகளே பதிவானது.  மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது. இந்த வாக்குகள்  8ம் தேதி எண்ணப்படுகிறது.

error: Content is protected !!