Skip to content
Home » ஈரோடு கிழக்கு வாக்கு எண்ணிக்கை 15 சுற்றுகள் .. ரிசல்ட் எப்போ?

ஈரோடு கிழக்கு வாக்கு எண்ணிக்கை 15 சுற்றுகள் .. ரிசல்ட் எப்போ?

  • by Senthil

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 238 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. 77 வேட்பாளர்கள் போட்டியில் இருந்ததால் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்களில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் ஓட்டுச்சாவடிகளில் வாக்களித்தனர். இது 74.79 சதவீதமாகும். இதுதவிர வாக்குப்பதிவுக்கு முன்பே 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டுகள் பதிவு செய்தனர். இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் காப்பு அறை சீல் திறக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான எச்.கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை பணியில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அதிகமாக இருப்பதால் 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கைக்காக 16 மேஜைகள் போடப்பட்டு உள்ளன. 15 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்படும். எனவே மதியத்துக்குள் முடிவுகள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!