Skip to content
Home » என்ஜினீயரிங் கவுன்சலிங்… ஆகஸ்ட் 2ம் தேதி தொடக்கம்

என்ஜினீயரிங் கவுன்சலிங்… ஆகஸ்ட் 2ம் தேதி தொடக்கம்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இந்த நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. ரேண்டம் எண் ஜூன் 7-ல் வெளியாகும் நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 12 முதல் 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 12-ம் தேதி வெளியிடப்படுகிறது.இதையடுத்து முதலில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ந்தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 7-ந்தேதி முதல் செப்டம்பர் 24-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கலந்தாய்வு விவரங்கள், வழிகாட்டி, கால அட்டவணையை மாணவர்கள் இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!