Skip to content

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பால இறக்கம் சென்னை பைபாஸ் சாலை தனியார் வாகன ஷோரூம் அருகே இன்று காலையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மூதாட்டி சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தலை முழுவதும் இந்த விபத்தில் நசுங்கிவிட்டது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? இங்கு எதற்காக வந்தார்? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!