சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினமும் 105 டிகிரிக்கு மேல் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகமும், அரசும் அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில், வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் நீர்மோர் பந்தல் திறக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.