அ.தி.மு.க.வில் ஜெயலலிதா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம், இவர் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக உள்ளார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு எம்.எல்ஏவாகவும் உள்ளார்.
இந்நிலையில் ஒரத்தநாடு அருகே உள்ள உறந்தைராயன்குடிகாடு பகுதியில் உள்ள வைத்திலிங்கம் பூர்வீக வீட்டில் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னை சட்டமன்ற விடுதி அலுவலகத்தில் உள்ள வைத்திலிங்கம் அறை மற்றும் மேலும் 4 இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள்.2011-2016 ஆண்டு காலத்தில் அமைச்சராக இருந்தபோது முறைகேடாக சொத்து சேர்த்ததாக புகார் அளிக்கப்பட்டதைத்தொடர்ந்து, லஞ்சஒழிப்புத்துறை போலீசார் நடத்திய விசாரணயின் அடிப்படையில்தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தெரிகிறது.