Skip to content
Home » தஞ்சையில்…..வைத்திலிங்கம் மகன் வீட்டிலும் ED ரெய்டு

தஞ்சையில்…..வைத்திலிங்கம் மகன் வீட்டிலும் ED ரெய்டு

  • by Senthil

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்  வருமானத்துக்க அதிகமாக சொதது சேர்த்ததாக  லஞ்ச ஒழிப்புத்துறை  வழக்குப்பதிவு செய்தது. இந்த நிலையில் இன்று   தெலுங்கன்குடிகாட்டில் உள்ள வைத்திலிங்கத்தின் வீடு, அவரது மகன் வீடு,  வைத்திலிங்கத்தின் சட்டமன்ற அலுவலகம் உள்பட 6 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

தஞ்சை அருளானந்தம் நகரில்  வைத்திலிங்கத்தின் மகன் பிரபு வீடு உள்ளது. இந்த வீட்டில் தான் 2வது மகன்  டாக்டர்  சண்முக பிரபுவும் வசிக்கிறார். இவர் தஞ்சை மருத்துவ கல்லூரியில்  ஆர்த்தோ டாக்டராக பணியாற்றுகிறார். அவர் இன்று  சொந்த பணி காரணமாக சென்னை சென்று உள்ளார்.

மற்ற 2 மகன்களான  பிரபு, ஆனந்த் பிரபு ஆகியோர்  தெலுங்கன் குடிகாட்டில் தான் இருக்கிறார்கள்.  தஞ்சை வீட்டில் டாக்டரின் குடும்பத்தினர் மட்டும் உள்ளனர். அங்கும் 4 அதிகாரிகள்,  2 மத்திய போலீசார் பாதுகாப்புடன்  சோதனை நடத்தி வருகிறார்கள்.  வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாத நிலையில், தெலுங்கன்குடி காட்டில்  பிரபு இருப்பதை அறிந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை  தஞ்சை வீட்டுக்கு வரும்படி அழைத்தனர். அதன்படி அவர் தஞ்சை வந்தார். அதைத்தொடர்ந்து அவரிடமும் விசாரணை நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!