Skip to content

மின் இணைப்புக்கு லஞ்சம்… மதுரை உதவி பொறியாளர் கைது

மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்தவர் பிரிட்டோ சகாயராஜ். இவர்  புதிய வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு கோரி  விளாங்குடி  மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.  விண்ணப்பத்தை பரிசீலித்த  மின்வாரிய உதவி பொறியாளர்  ஜான் கென்னடி தனக்கு ரூ.17 ஆயிரம் , லஞ்சம்  தரும்படி கேட்டு உள்ளார்.

லஞ்சம் கொடுக்க  விரும்பாத பிரிட்டோ சகாயராஜ், இது குறித்து  மதுரை  லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.  போலீசார்  ரசாயனம் தடவிய பணத்தை  பிரிட்டோ சகாயராஜிடம் கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை அவர் உதவி பொறியாளர் ஜான் கென்னடியிடம் கொடுத்தபோது,   லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜான் கென்னடியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!