Skip to content

மியன்மரில் பயங்கர நிலநடுக்கம்

  • by Authour

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் எல்லையாக உள்ளது மியன்மர். இங்கு இன்று காலை  11.50 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவாகியுள்ளது.நைபியிடவ் என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் அதிக அளவில் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் ஏராளமானோர் பலியானதாக கூறப்படுகிறது. சேத விவரங்கள் உடனடியாக  தெரியவில்லை.  அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.  நிலநடுக்கத்தில் தப்பிய மக்கள் வீதிகளில் கண்ணீருடன் நிற்பதை காணமுடிந்தது.

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கிலும்  இந்த நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது. உள்ளூர் நேரப்படி அங்கு பிற்பகல் 1.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!