அந்தமான் நிக்கோபார் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் அந்தமான் கடல் பகுதியில் 77 கி.மீ ஆழமாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகாலை 3.40 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகி உள்ளது.
