Skip to content
Home » கலங்கலான குடிநீர்….. அதிரடி ஆய்வு நடத்திய மேயர் அன்பழகன்

கலங்கலான குடிநீர்….. அதிரடி ஆய்வு நடத்திய மேயர் அன்பழகன்

  • by Senthil

திருச்சி மாநகராட்சி மண்டலம் எண் – 2 மற்றும் 3 வார்டு எண் -16மற்றும் 17வடக்கு தாராநல்லூர் பகுதி , கலைஞர் நகர் பகுதி களில் குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.  அந்த  புகாரின் பேரில்  மேயர் மு.அன்பழகன் ,  மாநகராட்சி அலுவலர்கள்  மற்றும் பொறியாளர்களுடன்  சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக விரைந்தார்.

வீடுகளில் வரும்  குடிநீரை  நேரடியாக  ஆய்வு செய்தார்.  அப்போது குடிநீர் சிறிது கலங்கலாக இருப்பதை அறிந்து, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் மேயர் மு.அன்பழகன் உறுதியளித்தார். எந்த இடத்தில் இந்த பிரச்னை ஏற்படுகிறது என அறிந்து உடனடியாக மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என மேயர் உத்தரவிட்டார்.

பின்னர் தாராநல்லூர் வசந்தா நகர் பகுதியில் அங்கன்வாடி மையம் கட்டும் பணியையும், 20 வது வார்டு பூலோகநாதர் கோவில் தெரு பகுதியில் புதிதாக நியாய விலை கட்டுவதற்கான இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் நகரப் பொறியாளர் சிவபாதம், செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர்கள் சாலைத்தவ வளன் , சரவணன் மற்றும் உதவி செயற்பொறியாளர் இளநிலை பொறியாளர் , மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன் ,எல் ஐ சி சங்கர் , . சண்முக பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!