Skip to content

கரூர் பாதாளசாக்கடை ஒப்பந்ததாரர் அட்ராசிட்டி….. வீடியோ…

  • by Authour

கரூர் மாநகராட்சி 16வது வார்டுக்கு உட்பட்ட ஜெஜெ நகர் குடியிருப்புப் பகுதியில் சாக்கடை கட்டுமானப் பணிகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. அந்த தெருவில் கோமதி என்பவரின் வீட்டை ஒட்டி சாக்கடை கட்ட பள்ளம் தோண்டிய போது அந்த வீட்டின் பக்கவாட்டுச் சுவர் விரிசல் விட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் ஒப்பந்ததாரரிடமும், நகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த வீட்டின் படுக்கை அறை சமையல் அறை, ஹால் உள்ளிட்ட இடங்களில் இரும்பு ஜாக்கியை கொண்டு முட்டு கொடுத்து பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சாக்கடைக்கும், அவர்களது பக்கவாட்டு சுவருக்கும் உள்ள இடைவெளியில் காங்கிரிட் போட வேண்டும் என்றால் 43 ஆயிரம் கொடுத்தால் தான் போடுவோம் என ஒப்பந்ததாரர் வீட்டின் உரிமையாளரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேலையை கிடப்பில் போட்டு விட்டுச் சென்ற நிலையில், அப்பகுதி பொதுமக்கள் விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என்றும், பணிகளை முடிக்காததால் வீடுகளுக்குச் செல்லவும், வீட்டு கழிவு நீர் வெளியேற வழி இல்லாமல் இருப்பதாக குற்றம் சாட்டினர்.

இதனை தொடர்ந்து அங்கு மாமன்ற உறுப்பினர் பூபதி மற்றும் மாநகராட்சி பொறியாளர் ரவி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி

ஒப்பந்ததாரரை அந்த வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் விரைந்து பணிகளை முடிக்க உத்தரவிட்டதை அடுத்து பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று கான்கிரீட் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர் வீட்டின் முன்பு பணம் கொடுக்காமல் காங்கிரிட் அமைக்க முடியாது என்று ஒப்பந்ததாரர் கூறிய நிலையில் வீட்டின் உரிமையாளர்களான பாலச்சந்தர் மற்றும் கோமதி தம்பதிகள் இருவரும் கழிவுநீர் வடிகால் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதனை பொருட்படுத்தாமல் ஒப்பந்ததாரர் அவர்கள் மீதும்  கான்கிரீட் சிமெண்ட் கலவையை கொட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!