Skip to content

அரசு டாக்டர்கள் ஸ்டிரைக்…… நோயாளிகள் அவதி

  • by Authour

 சென்னை கிண்டி அரசு ஆஸ்பத்திரியில்   டாக்டர்  பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் செந்தில்  வேண்டுகோளின்படி இன்று தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 புறநோயாளிகள் பிரிவு, அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள், பிற சிகிச்சைகள், மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகியவை தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில்  இன்று நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தல் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் இன்று மருத்துவமனை வளாகத்தில்  கண்டன ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.இதனால் புறநோயாளிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.  சில இடங்களில் புறநோயாளிகள், மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். தொலைதூரத்தில் இருந்து வந்த நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!