தமிழக எழுத்தாளரும், தொழிலதிபரும், மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பின் நிறுவனரும் ஆவார். ‘பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி? ‘, ‘உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்’, ‘எண்ணங்கள்’, ‘நீதான் தம்பி முதலமைச்சர்’ உட்படப் பல நூல்களை எழுதியவர். இவரின் பிறந்த சொந்த ஊரான மயிலாடுதுறை அருகே விளநகரில் அவரது நினைவாக திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் விளநகரில் உதயமூர்த்தி சிலையை திறந்து வைத்தார். இதனைதொடர்ந்து அருளாசி வழங்கி பேசுகையில், தன்னுடைய எழுத்தாற்றளாலும், சிந்தனை செயல்களால் மக்களை நல்வழி படுத்தியவர். இது ஒரு அரசன் செய்கின்ற வேலை அதனை உதயமூர்த்தி செய்திருக்கிறார் நல்ல நடத்தைகளை சொல்லிகொடுப்பது அரசின் கடமை அந்த நன்னடத்தையை உலகிற்கு சாதித்து காட்டியவர் உதயமூர்த்தி. தன்னிறைவு பசுமை கிராமங்கள் இயக்கம் தேசிய அமைப்பாளர் ஆறுபாதி கல்யாணம், விஸ்வநாதன், யசோதா, சத்தியநாராயணன் உட்பட பலர் கலந்துகொண்டனர். சித்தார்த்தன் நன்றி கூறினார்.