புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் லஞ்சம் பெற்றதாக சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த விவகாரம் புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று எதிரொலித்தது.
இதனால் அனைவரையும் குண்டுக்கட்டாக வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட சபைக் காவலர்கள் எதிர்க்கட்சி தலைவர் சிவாவை குண்டுக்கட்டாக வெளியே தூக்கி வந்தனர். தொடர்ந்து காங், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்
இதனிடையே சட்டப்பேரவைக்கு தாமதமாக வந்த காரைக்கால் திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், நாக தியாகராஜன் ஆகியோர் அவைக்கு வந்து வெளியேற்றியவர்களை மீண்டும் அவைக்குள் அழையுங்கள். அவர்கள் முக்கியப் பிரச்சினையை தான் பேசியுள்ளார் என்றனர்.
இதற்கு சபாநாயகர் செல்வம், “இது சிபிஐ விவகாரம்.மத்திய அரசு பதில் கூறும். சட்டமன்றம் அதற்குப் பதிலளிக்கும் இடமில்லை.” எனக் கூறினார். மேலும் அமைச்சர் பதவி விலக கூற வேண்டிய அவசியமில்லை என ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் கோஷமிட அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
அப்போது உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் குறுக்கிட்டு, ‘கேள்வி நேரத்துக்கு பிறகு விவாதிக்கலாம் என கூறினார் . தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தாரா? சபாநாயகர் கூறிய பிறகு அவைக்கு நடுவில் நாடகம் தேவையில்லை” எனக் கூறினார் . அதையடுத்து தாமதமாக வந்த 2 திமுக எம்எல்ஏக்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.