மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம். நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை மாவட்ட அளவில் கூர்ந்தாய்வு செய்து விரைவுபடுத்தவும், சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டதில் – மாற்றங்கள் செய்து ஆணை வௌியிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக கே.என்.நேரு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக நியமனம்.
தேனி மாவட்ட பொறுப்பு அமைச்சராக ஐ.பெரியசாமி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக நியமனம்.
திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சராக எ.வ.வேலு பொதுப்பணித்துறை அமைச்சராக நியமனம்.
தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண்மை -உழவர் நலத்துறை அமைச்சராக நியமனம்.
தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சராககே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக நியமனம்.
தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்து றை அமைச்சராக நியமனம்.
கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த ஆர். காந்தி, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம்.
திருவாரூர் மாட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த அர. சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமணம் செய்யப்படுகிறார்.
மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சராக இருந்த சிவ வீ மெய்யநாதன், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பு அமைச்சராக செயல்படுவார்.
எஸ். ரகுபதி, மாண்புமிகு சட்டத் துறை அமைச்சரி நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம்.