Skip to content

வேளாங்கண்ணியில் மாற்றுத்திறனாளி…. வீட்டோடு எரித்துக்கொலை

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஸ்வரம் மீனவர் காலனியை  சேர்ந்தவர் ராஜேஷ்(45). மாற்றுத்திறனாளியான இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கூரை வீட்டில் வசித்து வருந்தார்.  மனைவி செல்வி 100 நாள் வேலைக்கும், அவருடைய குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கும் சென்றதால் ராஜேஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது ராஜேஷின் கூரை வீடு தீப்பிடித்து எரிந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அலறி அடித்து ஓடி வந்து தீயை அணைத்த போது ராஜேஷ் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் தீயில் எரிந்து கொண்டு இருந்தார்.

உடனே தீயை அணைத்த பொதுமக்கள் ராஜேஸை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். துணி மற்றும் கயிற்றால் கை கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ராஜேஷ் 80 சதவீத தீக்காயங்களுடன்  ஆபத்தான நிலையில் இருந்தார். பின்னர் நாகை நீதிபதியிடம் மரண வாக்குமூலம் அளித்த ராஜேஷ்  சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். நாகை அருகே மாற்றுத்திறனாளி கைகால்கள் கட்டப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!