Skip to content
Home » தர்மசாலாவில்…10 ஆண்டுகளுக்கு பின் இன்று ஐபில் கிரிக்கெட் போட்டி

தர்மசாலாவில்…10 ஆண்டுகளுக்கு பின் இன்று ஐபில் கிரிக்கெட் போட்டி

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் இந்த 20 ஓவர் திருவிழாவில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. டில்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய 3 இடத்துக்கான ரேசில் 7 அணிகள் இருக்கின்றன.  இந்நிலையில் தர்மசாலாவில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் 64-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, டில்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு 19,000 பார்வையாளர்கள் கொண்ட தர்மசாலா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி இன்று நடைபெற உள்ளது.  10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான ஏற்பாடுகளை இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க நிர்வாகம் சிறப்பாக முடித்துள்ளது. இந்த சீசனின் 64வது மற்றும் 66வது ஐ.பி.எல். போட்டிகளை காண மைதானம் தயாராக உள்ளது. தரையைச் சுற்றி ஹார்டிங் மற்றும் எல்இடிகள் நிறுவப்பட்டுள்ளன. மைதானம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடைசியாக 2013ம் ஆண்டு இங்கு ஐ.பி.எல். போட்டிகள் நடந்தன. மைதானம் தொடர்பாக இமாச்சல பிரதேச கிரிக்கெட் கவுன்சில், மாநில அரசு இடையே சட்டப்போராட்டம் நடந்து வந்ததால் இங்கு போட்டிகள் நடைபெறாமல் இருந்து வந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!