Skip to content
Home » விளவங்கோடு தாரகை….. எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

விளவங்கோடு தாரகை….. எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

மக்களவை தேர்தலுடன்,  குமரி மாவட்டம்  விளவங்கோடு  சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்தது. இதில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட  தாரகை கத்பர்ட் அமோக வெற்றி பெற்றார். இன்று அவர்  சென்னையில்  சபாநாயகர் அலுவலகத்தில்  எம்.எல்.ஏவாக  பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின்,  மற்றும் அமைச்சர்கள் நேரு, பொன்முடி,   எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும்  காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, சட்டமன்ற கட்சித்தலைவர் ராஜேஷ்குமார்,   விஜய்வசந்த் எம்.பி.  உள்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!